சுத்தானந்தபாரதியாரும் பேரூராதீனமும்
தமிழ்
மொழி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தவரில் ஒருவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்.பேரூராதீனம்
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் 1951 ம் ஆண்டு சத்வித்ய சன்மார்க்க
சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவிற்கு அழைத்தார்.கவியோகி அவர்கள் 22 வருடம் எங்கும் பேசாமல்
மவுனம் காத்து வந்தார். பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் தொடர்
கடித வற்புறுத்தல் காரணமாக பேரூராதீன விழாவில் தம்முடைய மவுனத்தைக் கலைத்து சீவ-சிவரகசியம்
எனும் தலைப்பில் மூன்று மணி நேரம் உரை நிகழ்த்தினார்.
கவியோகி சுத்தானந்த
பாரதியாரின் 22 வருட மவுன தவத்தை கலைத்த பெருமை பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி
அடிகளார் அவர்களையே சாரும்.
No comments:
Post a Comment