Tuesday, 11 October 2016

பொதுவுடைமை



நடந்தேன்.
ஒற்றையடிப் பாதையில் ஒரு ஓரமாய் நடந்தேன்.
துளிர் விட்ட மரத்தில் சிறிது நேரம் களைப்பாற்றி விட்டு
பாதி நகரமான எனது கிராமத்திற்கு நடந்தேன்.
சோளம் கொத்தித் தின்ற சிட்டுக்குருவிகளைக் காணாமல்
கண்ணீர் விட்டேன்.
மறுநாள் பாதி நகரமான எமது கிராமத்தை விட்டு
ஒற்றையடிப் பாதையில்
நடந்தேன்.
ஒற்றையடிப்பாதையில் இரண்டு பேர் துளிர் விட்ட மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தனர்.
ஏனென்று கேட்டேன்,
ஒற்றையடிப் பாதையை இரு வழிச் சாலையாக மாற்ற                                                 இந்த மரம் இடைஞ்சல் என்றனர்.
எல்லோரும் பயன் பெற பொதுவுடைமை என்றனர்.
தனியுடைமை தள்ளாடிய படி மரம் வீழ்ந்தது ,எனது  பாதி நகரமான கிராமம்  மீதியும் நகரமானது.
நடந்தேன்.

Wednesday, 21 September 2016

திருஈங்கோய்மலை

திருஈங்கோய்மலை களப்பயணம் .    செங்குத்தானப் படிக்கட்டுகள் கால்வலியுடன் சென்று மனவலிமை பெற்று திரும்பிய தலம்.அன்புடன் சங்கர்.

Friday, 10 June 2016

பொதுவுடைமை மரம்



                                                    கவிதைகள்
                                                  பொதுவுடைமை
                          
நடந்தேன்.
ஒற்றையடிப் பாதையில் ஒரு ஓரமாய் நடந்தேன்.
துளிர் விட்ட மரத்தில் சிறிது நேரம் களைப்பாற்றி விட்டு
பாதி நகரமான எனது கிராமத்திற்கு நடந்தேன்.
சோளம் கொத்தித் தின்ற சிட்டுக்குருவிகளைக் காணாமல்
கண்ணீர் விட்டேன்.
மறுநாள் பாதி நகரமான எமது கிராமத்தை விட்டு
ஒற்றையடிப் பாதையில்
நடந்தேன்.
ஒற்றையடிப்பாதையில் இரண்டு பேர் துளிர் விட்ட மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தனர்.
ஏனென்று கேட்டேன்,
ஒற்றையடிப் பாதையை இரு வழிச் சாலையாக மாற்ற                                                 இந்த மரம் இடைஞ்சல் என்றனர்.
எல்லோரும் பயன் பெற பொதுவுடைமை என்றனர்.
தனியுடைமை தள்ளாடிய படி மரம் வீழ்ந்தது ,எனது  பாதி நகரமான கிராமம்  மீதியும் நகரமானது.
நடந்தேன்.
                                                                                                     பொஇச…
                                                                                                           

Thursday, 26 May 2016

ஐந்திணைக் கருப்பொருள்கள்

அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,
பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம்.

2.3.1 குறிஞ்சித் திணை

முதற்பொருள்

நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்
பொழுது - 

அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்

ஆ) சிறு பொழுது - யாமம்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

சேயோன்

2. உணவு - 

ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி,
கிழங்கு

3. விலங்கு - 

புலி, யானை, கரடி, பன்றி

4. மரம் - 

அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5. பறவை - 

கிளி, மயில்

6. பறை - முருகியம், தொண்டகப் பறை

7. தொழில் - 

தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை
விதைத்தல், வேட்டையாடுதல்

8. யாழ் - 

குறிஞ்சி யாழ்

9. பண் - 

குறிஞ்சிப் பண்

10. ஊர் - 

சிறுகுடி, குறிச்சி

11. நீர் - 

அருவி நீர், சுனை நீர்

12. மலர் - 

காந்தள், வேங்கை, குறிஞ்சி

உரிப்பொருள்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)

2.3.2 முல்லைத் திணை

முதற்பொருள்

நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்

பொழுது - 

அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது : மாலை

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

மாயோன்

2. உணவு - 

வரகு, சாமை

3. விலங்கு - 

மான், முயல்

4. மரம் - 

தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5. பறவை - 

காட்டுக்கோழி, சேவல்

6. பறை - 

ஏறுகோட் பறை

7. தொழில் - 

ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8. யாழ் - 

முல்லை யாழ்

9. பண் - 

குறிஞ்சிப் பண்

10. ஊர் - 

பாடி, சேரி

11. நீர் - 

குறுஞ்சுனை, கான்யாறு

12. மலர் - 

முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்

உரிப்பொருள்

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

2.3.3 மருதத் திணை

முதற்பொருள்

நிலம் - 

வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது - 

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

இந்திரன் (வேந்தன்)

2. உணவு - 

செந்நெல், கரும்பு

3. விலங்கு - 

எருமை, நீர்நாய்

4. மரம் - 

வஞ்சி, காஞ்சி, மருதம்

5. பறவை - 

தாரா, நீர்க்கோழி

6. பறை - 

மணமுழவு, நெல்லரி கிணை

7. தொழில் - 

விதைத்தல், விளைத்தல்

8. யாழ் - 

மருத யாழ்

9. பண் - 

மருதப் பண்

10. ஊர் - 

ஊர்கள்

11. நீர் - 

ஆற்றுநீர், பொய்கை நீர்

12. மலர் - 

தாமரை, கழுநீர்

உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.

2.3.4 நெய்தல் திணை

முதற்பொருள்

நிலம - 

கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது - 

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்

ஆ) சிறுபொழுது - எற்பாடு

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

வருணன்

2. உணவு - 

மீன், உப்பு

3. விலங்கு - 

உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும்
எருது), சுறா

4. மரம் - 

புன்னை, ஞாழல், கண்டல்

5. பறவை - 

அன்றில், அன்னம்

6. பறை - 

மீன்கோட் பறை

7. தொழில் - 

மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு
விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8. யாழ் - 

நெய்தல் யாழ்

9. பண் - 

நெய்தல் பண்

10. ஊர் - 

பட்டினம், பாக்கம்

11. நீர் - 

உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12. மலர் - 

நெய்தல், கைதை (தாழை)

உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

2.3.5 பாலைத் திணை

முதற்பொருள்

நிலம் - பாலை நிலம்

பொழுது - 

அ) பெரும்பொழுது - வேனிற் காலம்,
பின்பனிக் காலம்
ஆ) சிறுபொழுது - நண்பகல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

கொற்றவை

2. உணவு - 

வழிப்போக்கரிடம் திருடிய உணவு

3. விலங்கு - 

யானை, புலி, செந்நாய்

4. மரம் - 

இருப்பை, உழிஞை

5. பறவை - 

கழுகு, பருந்து, புறா

6. பறை - 

சூறை கோட் பறை

7. தொழில் - 

வழிப்பறி, சூறையாடல்

8. யாழ் - 

பாலை யாழ்

9. பண் - 

பாலைப் பண்

10. ஊர் - 

பறந்தலை

11. நீர் - 

கூவல் (கிணறு, குழி)

12. மலர் - 

மரா, குரா

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில்
இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு.
அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.

Wednesday, 18 May 2016

பயணங்கள்



                                         TN 33 AA 2235
ஏப்ரல் 12 ,2015. வெயில் தன் வேலைகளைச் செய்வதற்கு தயாராக இருந்தது.
நானும் தனபால் சாரும் அதிகாலை 5.30 க்கு தயாராகி கல்லாறு ஆற்றின் பாலம் அருகே நின்று மலையின் அழகை ரசித்துக் கொண்டு நின்றோம். 5.45 மணிக்கு ராஜசேகர் அவருடைய வாகனத்தில் மதிய உணவை தயார் செய்துக் கொண்டு வந்தார்.
              பாதியில்  முடிவது பயணத்திற்கு அழகல்ல. TN 33 AA 2235 என்னுடை வாகனத்தின் எண்.நான் மிகவும் ரசிக்கும் ஸ்பிளண்டர் பைக். என்னுடைய பல தொலை தூர பயணங்களில் என்னுடன் வந்த தோழன். இதுவரை TN 33 AA 2235 எந்த பைக் என்னை எந்த இடத்திலும் தடுமாறி நிற்க வைத்தது இல்லை.
            6 மணிக்கு நான், தனபால் சார், ராஜசேகர் சார்  மூவரும் உதகை மலையின் மீது ஏறத் தொடங்கினோம். வழியில் பர்லியாற்றில் நின்று நேநீர் அருந்தினோம். 7.30 க்கு உதகையை அடைந்தோம். அங்கிருந்து கல்லட்டி வழியாக முதுமலை பயணம். கல்லட்டி வழியானது மிகவும் சவாலானப் பாதை.மலையில் இருந்து வீழும் அருவி நீர் போல பாதை இருக்கும்.
     கல்லட்டி முதுமலைச் சாலையில் அமர்ந்து கொண்டு வந்திருந்த உணவை வயிறு நிரம்ப சாப்பிட்டோம். அதன் பின் முதுமலை செல்லும் வழியில் யானைகள் , மான்கள்  காட்டெருமைகள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.
முதுமலை மூன்று சாலையில் நின்று டீ குடித்தோம்.இந்த இடம் தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா ஆகிய முன்று மாநிலங்களின் எல்லை. அங்கிருந்து பந்தீப்பூர் சாலையில் பயணம்.மிகவும் சவாலானப் பாதைகள்.
பந்தீப்பூர் சென்று முதன்மைச் சாலையில் இருந்து பிரிந்து பனிமலைக் கண்ணா எனும் தலத்திற்குச் சென்றோம்.சோழர்கள் கட்டிய கோவில்.
ராசேந்திரச் சோழன் வடநாட்டுப் பயணத்தில் இக்கோயிலைக் கட்டியதாக குறிப்புகள் உள்ளன. கர்நாடக இந்து அறநிலையம் இக்கோவிலை மிக அருமையான  முறையில் பராமரிக்கிறது. மலையின் கீழே கடுமையான வெயில் இருந்தாலும்,மலையின் மேலே குளிர் கடுமையாக இருக்கிறது.
              Description: G:\san jee\IMG-20150914-WA0000.jpg
அங்கிருந்து மீண்டும் பயணித்து மைசூர் முதன்மைச் சாலையை அடைந்தோம்.
பந்தீப்பூர் வனம் கர்நாடகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
      பந்தீப்பூரைக் கடந்து சாம்ராஜ் நகரை மாலை 3.30 க்கு அடைந்தோம். மதிய உணவை வழியில் ஓர் எல்லைக் கோயிலில் சாப்பிட்டு சிறிய உறக்கம்.4.15 க்கு மீண்டும் பயணம்.
                 கர்நாடகாவின் காடுகளை இருள் வருவதற்குள் கடந்தோம்.தமிழகத்தின் உச்சி எல்லையான திம்பம் வந்து நின்று 5 ரூபாய்க்கு டீ குடித்தோம்.
                    அங்கிருந்து கிளம்பி கடுமையான மலைப்பாதைகளைக் கடந்து பண்ணாரி அம்மன் கோயிலுக்கு இரவு 8.30 க்கு வந்து சேர்ந்தோம்.அங்கிருந்து மீண்டும் பயணித்து இரவு 10 க்கு மேட்டுப்பாளையம் வந்து இரவு உணவு உண்டோம். 470 கி.மீ பயணம்.
கல்லாறு-பர்லியாறு-குன்னூர்-ஊட்டி-கல்லட்டி-முதுமலை- மூன்று சாலை-பந்தீப்பூர்-பனிமலை-சாம்ராஜ் நகர்- தமிழக எல்லை-திம்பம்-பண்ணாரி-பவானி சாகர் அணை-மேட்டுப்பாளையம்-கல்லாறு..
                            மீண்டும் சந்திப்போம்.

Tuesday, 23 February 2016

அறுபத்து நான்கு கலைகள்

அறுபத்து நான்கு கலைகள்


எண்தமிழ் விளக்கம்வடசொல்1.எழுத்திலக்கணம்அக்கரவிலக்கணம்2.எழுத்தாற்றல்லிகிதம்3.கணிதவியல்கணித சாத்திரம்4.மறை நூல்வேத சாத்திரம்5.தொன்மம்புராணம்6.இலக்கணவியல்வியாகரணம்7.நய நூல்நீதி சாத்திரம்8.கணியக் கலைசோதிட சாத்திரம்9.அறத்துப் பால்தரும சாத்திரம்10.ஓகக் கலையோக சாத்திரம்11.மந்திரக் கலைமந்திர சாத்திரம்12.நிமித்தகக் கலைசகுன சாத்திரம்13.கம்மியக் கலைசிற்ப சாத்திரம்14.மருத்துவக் கலைவைத்திய சாத்திரம்15.உறுப்பமைவுஉருவ சாத்திரம்16.மறவனப்புஇதிகாசம்17.வனப்புகாவ்யம்18.அணி இயல்அலங்காரம்19.இனிதுமொழிதல்மதுரபாஷணம்20.நாடகக் கலைநாடக சாத்திரம்21.ஆடற் கலைநிருத்திய சாத்திரம்22.ஒலிநுட்ப அறிவுசப்த ப்ரம்மம்23.யாழ் இயல்வீணையிலக்கணம்24.குழலிசைவேணு கானம்25.மத்தள நூல்மிருதங்க சாத்திரம்26.தாள இயல்தாள சாத்திரம்27.வில்லாற்றல்அஸ்திர ப்ரயோகம்28.பொன் நோட்டம்கனகப் பரிட்சை29.தேர்ப் பயிற்சிஇரதப் பயிற்சி30.யானையேற்றம்கஜப் பரிட்சை31.குதிரையேற்றம்அசுவப் பரிட்சை32.மணி நோட்டம்இரத்தினப் பரிட்சை33.மண்ணியல்பூமிப் பரிட்சை34.போர்ப் பயிற்சிசங்கிராமவிலக்கணம்35.கைகலப்புமல்யுத்தம்36.கவர்ச்சியியல்ஆகரூடணம்37.ஓட்டுகைஉச்சாடணம்38.நட்பு பிரிக்கைவித்வேடணம்39.மயக்குக் கலைமோகன சாத்திரம்40.புணருங் கலைகாம சாத்திரம்41.வசியக் கலைவசீகரணம்42.இதளியக் கலைஇரசவாதம்43.இன்னிசைப் பயிற்சிகாந்தருவ வாதம்44.பிறவுயிர்மொழிபைபீல வாதம்45.மகிழுறுத்தம்கவுத்துக வாதம்46.நாடிப் பயிற்சிதாதுவாதம்47.கலுழம்காருடம்48.இழப்பறிகைநஷ்டம்49.மறைத்ததையறிதல்முஷ்டி50.வான்புகுதல்ஆகாய ப்ரவேசம்51.வான் செல்கைஆகாய கமனம்52.கூடுவிட்டு கூடுபாய்தல்பரகாய ப்ரவேசம்53.தன்னுறு கரத்தல்அதிருசியம்54.மாயம்இந்திரஜாலம்55.பெருமாயம்மகேந்திரஜாலம்56.நீர்க் கட்டுஜல ஸ்தம்பனம்57.அழற் கட்டுஅக்னி ஸ்தம்பனம்58.வளிக் கட்டுவாயு ஸ்தம்பனம்59.கண் கட்டுத்ருஷ்டி ஸ்தம்பனம்60.நாவுக் கட்டுவாக்கு ஸ்தம்பனம்61.விந்துக் கட்டுசுக்ல ஸ்தம்பனம்62.புதையற் கட்டுகனன ஸ்தம்பனம்63.வாட் கட்டுகட்க ஸ்தம்பனம்64.சூனியம்அவஸ்தை ப்ரயோகம்