Saturday, 18 October 2025

அறிய வேண்டிய வரலாறு - தஸ்தாவெஸ்கி


                            



உலகின் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டு இன்று கொண்டாடப்படும் தஸ்தாவெஸ்கி என்னும் ஆளுமை உருவாக அன்னா என்ற கதாபாத்திரம் அடைந்த அவமானங்களே காரணம் என்றால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். 

         நாடு, மொழி, மதம் ஆகியவற்றைக் கடந்து பலராலும் வாசிக்கப்படும் கரம்சோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டணையும் அசடன் எனப் பல   புகழ் பெற்ற நூல்களை எழுதிய தஸ்தாவெஸ்கி வாழ்வுஅன்னாவுக்கு முன் - அன்னாவுக்குப் பின் எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும்.

       சில செயல்கள்  காரணமாக  மிகப்பெரிய கடனில் சிக்கி நீதிமன்ற வழக்கிற்கு ஆளாகிறார் தஸ்தாவெஸ்கி.  நீதிமன்றத்தில் கடும் தண்டனைக்கு ஆளாக நேர்ந்த போது நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை அளித்தது. அந்தத்  தீர்ப்பு என்னவெனில் மூன்று மாதத்திற்குள் ஒரு நாவலை எழுதி அதன் மூலம் கடனை அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட தஸ்தாவெஸ்கி , எனக்கு என் எழுத்துகளைத் தட்டச்சு செய்ய ஒரு உதவியாளர் வேண்டும் என்று மட்டும் கேட்டார்.

        அதன்படி அன்னா என்ற பெண்ணை தஸ்தாவெஸ்கிக்கு உதவியாளராக நீதிமன்றம் நியமித்தது. ஆரம்பத்தில் அந்தப் பணியை விருப்பமில்லாமல் செய்த  அன்னா , சில நாட்களில் தஸ்தாவெஸ்கி எழுத்துகளின் மீது பெரும் காதல் கொண்டவராக மாறினார். அவரின் மீது அன்பு செலுத்தி அவரை நேசிக்கலானார்.

             தஸ்தாவெஸ்கியின் கடன்களை அன்னா தன் உடமைகளை விற்று அடைத்தார். கடனில் சிக்கியிருந்த தஸ்தாவெஸ்கியின் இல்லத்திற்குக் கடனாளர்கள் வந்து கடனைக் கேட்கும் போதெல்லாம் அன்னாவே  எதிர் நின்று பதில் கூறினார் .

வீட்டின் இயலாமைச்  சூழல் தஸ்தாவெஸ்கிக்குத் தெரியாமல் அவரை நன்குப் பார்த்துக் கொண்டார். தஸ்தாவெஸ்கி எழுதும் போது அவருக்கு அருகில் எப்போதும் ஒரு கெட்டிலில் தேநீர் இருக்குமாறும் , அந்த அறையை கடன்காரர்கள் யாரும் நெருங்காமலும் பாரத்துக்கொண்டார்.  

வீட்டின் உள்ளேயே அமர்ந்து இரவு பகல் பாராமல் எழுதிக் கொண்டே இருந்த தஸ்தாவெஸ்கி, இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே எழுதி வந்தார். பலரின் அவமானச் சொற்களை எதிர்கொண்டு பதில் அளித்து அந்த அவமானங்கள் எதுவும் தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பணியைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டார். 

தஸ்தாவெஸ்கி  எழுதியதை அன்னா உரிய முறையில் தட்டச்சு செய்து நூல் வடிவத்திற்கு வர பெரும் முயற்சிகள் பலவற்றை எடுத்தார். எழுபத்தி ஏழு நாட்களில் நூல் பணியை நிறைவு செய்த தஸ்தாவெஸ்கி வெளியே வந்து பார்த்த போது , கேட்ட போது அன்னா சந்தித்த அவமானங்கள் , கடன்கள் எல்லாவற்றையும் கேட்டு அந்த பெரும் எழுத்து மேதை கலங்கி நின்றது. அன்னா அடைந்த அவமானங்களின் ஊக்கம்தான் குற்றமும் தண்டனையும் என்ற நூல்.  குற்றமும் தண்டனையும்  வெளிவந்து பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டு அவர்களின் ஏழ்மையைப் போக்கியது.



 இரஷ்ய வரலாற்றில்  பல வருடங்கள் ஆனாலும் கொண்டாடப்படும் தஸ்தாவெஸ்கியின் எழுத்துக்குப் பின்னால் அவரது மனைவி   அன்னா  அடைந்த அவமானங்களே ஊக்கமாய் உறுதுணையாய் இருந்தது.

   அன்னா மட்டும் என் வாழ்வில் வராமல் போயிருந்தால் அவமான உலகில் நான்  சிறையிலோ  அல்லது  தற்கொலை செய்தோ இறந்திருப்பேன் என்று கூறிய தஸ்தாவெஸ்கியின் வாழ்க்கை அன்னா அடைந்த அவமானங்களின் பரிசு என்பதை அவரின் வரலாறு பதிவு செய்துள்ளது.

நீங்கள் உங்கள் வாழ்நாளில் கரமசோவ் சகோதரர்கள், சூதாடி, வெண்ணிற உறவுகள், உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள், அசடன், குற்றமும் தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி கதைகள், அப்பாவியின் கனவு   நூல்களை அவசியம் வாசித்து விடுங்கள். குற்றமும் தண்டனையும் நூல் என்னை வாசிப்பு அனுபவத்தில் திளைக்கச் செய்தது.  

 


No comments: