Tuesday, 26 August 2025

பாளையம் என்ற பெயரும் நல்லியம் பாளையமும் - நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -15


கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது . பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். 13 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. இதனை பாளையக்காரர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகத் திகழ்ந்தது. அதனால் கொங்கு நாட்டின் பெரும்பாலான ஊர்கள் பாளையம் என்னும் பெயரில் திகழ்ந்தன. 

இதில் பூந்துறை நாட்டில் நல்லியம்பாளையம் உள்ளடக்கிய ஊராகத் திகழ்ந்தது. நல்லியம் பாளையம் ஊரைச் சுற்றி பாளையம் என்னும் பெயரில் பல ஊர்கள் காணப்படுகின்றன. 

பூந்துறை நாட்டின் அரச பகுதி பழையகோட்டை பட்டக்கார மரபில் வருவது என்று செப்பேடுகள் தெரிவிக்கின்றன. 

1.பூந்துறை நாடு

2.தென்கரை நாடு 

3.காங்கேய நாடு 

4.பொங்கலூர் நாடு 

5.ஆறை நாடு 

6.வாரக்க நாடு 

7.திருஆவினன்குடி நாடு

8.மண நாடு 

9.தலைய நாடு 

10.தட்டய நாடு 

11.பூவாணிய நாடு 

12.அரைய நாடு 

13.ஓடுவங்க நாடு 

14.வடகரை நாடு 

15.கிழங்கு நாடு 

16.நல்லுருக்கா நாடு 

17.வாழவந்தி நாடு 

18.அண்ட நாடு 

19.வெங்கால நாடு 

20.காவடிக்கா நாடு 

21.ஆனைமலை நாடு 

22.இராசிபுர நாடு 

23.காஞ்சிக்கோயில் நாடு 

24.குறுப்பு நாடு

ஆகிய நாடுகள் கொங்கு மண்டல நாடுகளாகத் திகழ்ந்தன. 


நல்லியம் பாளையம் ஊரைச் சுற்றி பாளையம் என்னும் பெயரில் பல ஊர்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில பெயர்களை இங்குக் காணலாம். 

சென்னிமலை சாலையில் உள்ள பாளையங்கள்

1. ரங்கம்பாளையம் 

2. சேனாதிபதிபாளையம்

3. முத்தம்பாளையம் 

4. காசிபாளையம் 

5. குப்பகவுண்டன்பாளையம்

6. தொட்டிபாளையம்

7. கவுண்டச்சிபாளையம்

8. வெ. மேட்டுப்பாளையம் 

9. முகாசி புலவபாளையம்

10. நாமக்கல் பாளையம் 

11. அர்த்தனாரி பாளையம் 

12. நல்லியம் பாளையம் 

13. கொண்டவன்நாயக்கன் பாளையம் 

14. தாசநாயக்கன் பாளையம் 

15. பனிமடா பாளையம் 


பெருந்துறை சாலையில் உள்ள பாளையங்கள்

1. பழைய பாளையம்

2. வீரப்பம்பாளையம் 

3. செங்கோடன் பாளையம்

4. வேப்பம் பாளையம்

5. சானார் பாளையம் 

6. கூறபாளையம் 

7. வள்ளிபுரத்தான்பாளையம் 

8. ராசம்பாளையம்

9.தோப்பு பாளையம் 

10. வேட்டுவ பாளையம் 

11. திருவேங்கடம் பாளையம் 

12. ஓலப்பாளையம்

13. மடத்துப்பாளையம் 



கரூர் மற்றும் முத்தூர் சாலையில் உள்ள பாளையங்கள்


1. கொல்லம் பாளையம் 

2. முத்துகவுண்டன் பாளையம் 

3. சின்னியம் பாளையம் 

4. ஆயகவுண்டன் பாளையம் 

5. செல்லத்தா பாளையம் 

6. பாண்டி பாளையம் 

7. ஆனந்தம் பாளையம் 

8. பாரப்பாளையம் 

9. மேற்கு பாளையம் 

10. தாண்டாம் பாளையம் 

11. மோலபாளையம்.

12. கந்தசாமி பாளையம் 

13. மின்னப்பாளையம் 

14. காங்கேயம் பாளையம் 

15. சாவடிப்பாளையம்

16. கணபதி பாளையம் 

17. கருமாண்டம் பாளையம் 

18. மலையப்பாளையம் 

19. காரணம் பாளையம் 

20. நாகமநாயக்கன் பாளையம் 

21. இச்சிபாளையம்

22. தாமரைப் பாளையம் 

23. ஆரம்பாளையம் 

24. மின்னப்பாளையம்

25. எல்லப்பாளையம்


பூந்துறை சாலை

1. மூலப் பாளையம்

2. ரகுபதிநாயக்கன் பாளையம் 

3. ஆனைக்கள் பாளையம் 

4. வெள்ளியம் பாளையம் 

5.  கவுண்டன்பாளையம் 

6. கொங்கடையம் பாளையம் 

7. குடுமியாம் பாளையம் 

8. அஞ்சுராம்பாளையம் 

9. ஊஞ்சப்பாளையம்     

ஈரோட்டில் இது போல 1800 க்கும் மேற்பட்ட ஊர்கள் பாளையம் என்ற பெயரில் இருப்பதை அறிந்தோம். 


நல்லியம் பாளையம் சோழாராட்சியில் , காலிங்கராயர் ஆட்சியில் எந்த நிலையில் இருந்தன என்ற வரலாறுகளைத் தேடி வருகிறோம். 

பூந்துறை நாட்டில் நல்லியம் பாளையத்தின் பங்கு போன்ற இன்னும் பிற விபரங்களையும் சான்றுகளையும் தேடித் தொகுக்கும் பணியில் இருந்த போது 1667 மற்றும் 1799 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் பூந்துறை  நாடு கடுமையான பாதிப்புகளைக் கண்டதாக வரலாறு குறிப்பிடுகின்றது. 

 பூந்துறை நாட்டின் ஓர் ஊராகத் திகழ்ந்த நல்லியம் பாளையமும் கடுமையான சேதங்களைக் கண்டதாகப்  பத்தாண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆய்வாளர் புலவர் இராசு ஐயாவைச் சந்தித்து உரையாடிய போது எம்மிடம் தெரிவித்துள்ளார். 

         படையணிகள் வாய்க்கால் கரைகளில் தான் முகாமிடுவார்கள். அவ்வகையில் நல்லியம்பாளையம் பள்ளம் வாய்க்காலில் திப்பு சுல்தான் , ஆங்கிலேயப் படைகள் முகாம் அமைத்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதை அறிந்தோம். 

நல்லியம் பாளையம் கதை பேசுவோம்- இன்னும் வரலாறு தொகுக்கப்பட வேண்டும். மண்ணின் , மரத்தின், மக்களின் கதைகளைப் பேசுவோம். 



No comments: