Sunday, 25 February 2024

ஹிட்லர்- அறிய வேண்டிய சில பக்கங்கள்- பொ.சங்கர்





                               


                    இந்த ஓவியத்தை மிகச்சிறந்த கலைஞனால் தான் வரைய முடியும். ஆம் வரலாற்றின் பக்கங்களில் சிறந்த ஓவியராகக் கோடுகளை வரைந்த ஒருவரை நாடுகளின் கோடுகளை மாற்றும் அளவிற்கு மாற்றியது யார்? சிறந்த ஓவியங்களை வரைந்தவர் ஹிட்லர் . சிறு வயதில் ஓவியக்கல்லூரிக்கு ஓவியம் வரைய ஹிட்லர்சென்ற போது ஓவியக்கல்லூரி நிர்வாகம் அவருக்கு சீட் தராமல் வெளியேற்றியது. அன்று ஓவியக்கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் பல நாடுகளின் எல்லைகள் மாறுபட்டிருக்காது. ஆனாலும் மிகச்சிறந்த ஓவியங்களை வரைந்து தன் நேரத்தைப் போக்குவார் என்று வரலாற்று ஊகங்கள் சொல்கின்றன.

சர்வதிகாரி, இரண்டாம் உலகப்போர், யூதர்கள் என்று சில சொற்களை வாசிக்க நேர்ந்தால் ஹிட்லர் என்னும் பெயரையும் வாசித்தே ஆக வேண்டும். கடுமையான போர்முறைகளின் இராஜதந்திரி என்று எதிரி நாடுகளாலேயே வர்ணிக்கப்பட்டவர். ஹிட்லரின் அறியாத சில பக்கங்களைப் புரட்டுவோம்.

இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஹிட்லர் தன் வாழ்வில் சைவ உணவுகளையே விரும்பி உண்டார். தன் வாழ்வில் போர்க்காலங்களில் கூட தப்பித்தவறி அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்த கருணையாளன்.

தன் சிறு வயதில் அதிகமான நூல்களை விரும்பி வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டவர் ஹிட்லர். அதிலும் சாகசங்கள் போர்கள் பற்றிய நூல்களை ஆழ்ந்து வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

சிறு வயதில் செய்த ஒரு தவறால் தனது ஆசிரியரிடம் இனி எக்காலத்திலும் மது , சிகரெட்டைத் தொட மாட்டேன் என்று சத்தியம் செய்தார். அதுபோலவே தன் இறுதிக்காலம் வரை நடந்தும் கொண்டார். தன் வாழ்வில் தனி மனித ஒழுக்கத்தைத் தங்கத்தைப் போல கடைப்பிடித்தார் ஹிட்லர். மது விடுதிகளுக்குச் சென்றாலும் மதுபானங்களைத் தொடாமல் , அருந்தாமல் இருந்துள்ளார். வரலாற்றில் பெரும் அரசுகள் வீழ்ச்சி அடைந்த இடம், பெண்கள் என்பதால் தன் வாழ்விலும் பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தாமல் பொது வாழ்வின் இலக்கணமாகவே திகழ்ந்துள்ளார்(தன் கடைசி காலத்தில் மட்டும் பெண்ணால் எதிரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்தார் என்கிறது வரலாறு. )

முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றமைக்கு யூதர்கள்தான் காரணம் என்னும் ஆழமான விதை ஹிட்லரின் ஆழ்மனதில் பதிந்தது. அதன் காரணமாகவே வரலாற்றில் யூத ஒழிப்பில் அதீத ஆர்வம் காட்டினார்.

ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதுதான் ஜெர்மனி ஏகாதிபத்திய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றது. அதற்குக் காரணம் ஹிட்லரின் ஆட்சி நிர்வாகம் என்பது மறுக்க முடியாத உண்மை.


ஹிட்லர் முதல் உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார். அங்கே அவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் 'ரன்னர்' பணி. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார். ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான். அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது.
ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம் இது' என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். "கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்!" என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.



முதல் உலகப்போரில் வெர்சைல்ஸ் ஒப்பந்தம் மூலம் வென்ற நாடுகள் ஜெர்மனியிடம் பல கோடிகளை நஷ்ட ஈடாகப் பெற்றுக் கொண்டன. ஜெர்மனியின் எல்லைகள் குறைக்கப்பட்டது. ஜெர்மனியின் இராணுவ பலம் குறைக்கப்பட்டது. இதனால் ஜெர்மானியர்கள் அவமானத்தால் தலைகுணிந்தனர். வேலை வாய்ப்புகள் இன்றி பசியின் கொடுமை நோக்கி ஜெர்மனி சென்று கொண்டிருந்த நேரத்தில் அரசியலில் கால்பதித்தார் ஹிட்லர். அதன்பிறகு வரலாற்றிலும் இடம்பிடித்தார். பசியால் வாடிய நாட்டை நேசித்து நேசித்து தன் கூர்த்த அறிவால் செதுக்கினார். இராணுவத்தை மேம்படுத்தினார். மக்களை மேம்படுத்தினார். உலக நாடுகள் ஹிட்லரை வீழ்த்த வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கும் போது பல நாடுகளை வென்று தன் ஆளுமைக்குள் வைத்திருந்தார் .

சிறந்த ஆளுமைமிக்க தலைவராக ஹிட்லர் உருவெடுப்பதற்குக் காரணம் அவரின் தனித்த பேச்சாற்றல். மிகச்சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களை தன் வயப்படுத்தினார். ஹிட்லரின் பேச்சு வசீகரம் மிக்கது என்று அன்றைய கால ஊடகங்கள் புகழ்மொழி பரப்பின என்பதை நம்பித்தான் ஆகவேண்டும் என்றில்லை. அதுதான் உண்மை. யூதர்களை அழிப்பதற்கு தனி அமைச்சகத்தையே உருவாக்கினார். அந்த அமைச்சகம் அந்தப் பணியில் மட்டும் செவ்வனே ஈடுபட்டது. வரலாற்றின் ஆகச்சிறந்த ஆளுமையாக உருவெடுத்திருக்க வேண்டிய ஹிட்லர் யூத அழிப்பின் காரணமாக, பல நாடுகளின் எல்லைகளை தன் ஓவிய வரைகோடுகள் போல மாற்றியமையால் வரலாற்றின் சர்வதிகாரி என்னும் பட்டத்தைப் பெற வேண்டியதாயிற்று.

தோல்வியின் இறுதி மரணமே தவிர எதிரிகளிடம் சிக்கக் கூடாது என்பதில் நாஜிப்படைகள் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தன. அதன்படி ஏப்ரல் 30 ஆம் நாள் தன் கைத்துப்பாக்கியால் வரலாற்றின் பெரும்பக்கங்களை ஆண்ட அரசன் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டாக வரலாறு பதிவு செய்கிறது.

‘என்றாவது ஒருநாள் சர்வ வல்லமை பொருந்திய நாடாக ஜெர்மனி மாறும்’ இது என் கனவு என்று முழக்கமிட்ட நாயகன் தன் கனவை அடைந்தே வீழ்ந்தார்.




வரலாற்று விரும்பிகள் வாசிக்க வேண்டிய நூல் - எனது போராட்டம் என்னும் மெயின் காம்ப்




கூடுதல் தரவுகள்


மேற்காணும் படத்தில் எல்லோரும் ஹிட்லரை வணங்க ஒரு வீரன் கைகட்டி நிற்கும் படம் வரலாற்றுப்பக்கங்களில் அலசப்பட்ட புகைப்படம்.









1 comment:

Bharathanaatiyam said...

வாசித்தேன் மகிழ்ந்தேன்