பேரன்பு
திரை இசைக்குத் தீட்டுக் கழித்து
தமிழிசைக்குத் தாலாட்டுப் பாடுவதும்
பேரன்பே!
பிச்சைக்காரன் என்றாலும்
உன்னை வணங்கினால்
நீயும் அவனை வணங்கு…
அது பேரன்பு!
மனசிருந்தால்
காசு போடு
இல்லையென்றால்
ஒரு புன்னகை சிந்து…
பூரித்துப் போவான்!
அது பேரன்பு !
ஒவ்வொரு பூக்களும்
வாசத்திற்கு உரியவை தான்
ஒவ்வொரு மனிதனும்
நேசத்திற்கு உரியவன் தான்!
பேரன்பு கொள்!
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நீயும் வாடாதே...
அதற்கு நீரூற்று அதுதான் பேரன்பு!
கொலைவாளினை எடு மிகு கொடியோர் செயல் அறவே.. தாசனின் வரிகளும் பேரன்பே!
நீருக்குப் புட்டி வைத்தவனையும்
காற்றுக்குள் மாசு வைத்தவனையும் களையெடு..அது
உலகுக்கு நாம் செய்யும் பேரன்பு!
மண்ணை மலடாக்கும் மானிடர்களை மண்ணே
மன்னிக்கும் செயல்தான் பேரன்பு!!
வரிப்புலிகளையும்
பூனைகளையும் ஒன்றாக ஓட வைப்பவனை
தண்டிப்பதும் பேரன்பே!
பொ.சங்கர்.
No comments:
Post a Comment