Wednesday, 1 April 2020

கீழடி

கீழடி

உச்சம் கண்ட தமிழனின் வரலாற்றை இனியும் மிச்சம் வைக்கக் கூடாது என்று வட நாட்டுக் கூட்டம் திட்டம் போடுது!

நாகரீகத்தின் தொட்டிலில் கட்டில் போட்டு அமர்ந்து, வரலாற்றைக் கடுகளவாய் ஒரு கூட்டம்
குறைக்கின்றது!

கீழடி அகழ்வாய்வை மேலே அடி வைக்காமல் வெளியிடாமல் வேகம் கூட்டி வாசம் காட்டி வஞ்சனைகள் தொட்டு வருடுகிறது இன்னொரு கூட்டம்!

முப்போகம் விளைய வைத்த வரலாற்றை வெளியிடாமல்
முச்சந்தியில் நிற்க வைத்து தமிழனுக்கு இலவச அரிசி தருகின்றது மற்றொரு கூட்டம்!!

குழிக்குள் குழி வெட்டி
கூட்டமாய் கூடி நின்று கற்பனைகள் பல செய்து எட்டிப்பார்த்த கீழடியை , இது மண் குழி தான் என்று எட்டப்பன் வேலை செய்த நாகசாமிக்கு செம்மொழி பதவி!

மூடு பல்லக்கில் கீழடி பொருட்களை எருமை தேசம் கொண்டு சென்று ஊனம் ஆக்கிய வீணர்களுக்கு உயர் பதவி!

ஹரப்பா அகழ்வாய்வை உரைப்பாய்  சொன்ன ஊது குழல்கள் கீழடியை கல்லடியில் போட்டு வைத்திருக்கும் கயமைத்தனம் என்று வெளியாகும்?
ஆதவனைக் கைகளில் மறைக்க முடியாது!
தமிழர்களின் வரலாற்றைக் கீழடியில் முடக்க முடியாது!

வஞ்சனைகளை வெஞ்சினம் வெல்லும்!

பொ.சங்கர்

No comments: