ரஷ்யாவின் ஜார் ஆட்சி 1917 ல் கவிழ்க்கப்பட்டது. ஜார் மன்னராட்சி என்பது ரஷ்யாவில் 16 ஆம் நூற்றாண்டு முதல் 1917 வரை நடந்த முடியாட்சி அரசாட்சி ஆகும். 1917 க்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உருவான நான்கு சோசலிச குடியரசுகள் டிசம்பர் 30, 1922 அன்று சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஒரு தீவிர இடதுசாரி குழுவான போல்ஷிவிக்குகள், ரஷ்யாவின் இரண்டாம் ஜார் நிக்கோலஸைத் தூக்கியெறிந்து, பல நூற்றாண்டுகளாக முடியாட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். முன்னாள் ரஷ்யப் பேரரசின் பிரதேசங்களைக் கைப்பற்றிய போல்ஷிவிக்குகள் ஒரு சமூக அரசை நிறுவினர்.
அதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷிவிக்குகள் போராடி, பழைய ஜாரிச ஆட்சியில் எஞ்சியிருந்த அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்தனர். 1922 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஜார்ஜியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே கையெழுத்தான ஒரு ஒப்பந்தம் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கியது. சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைவர் விளாடிமிர் லெனின் ஆவார்.
சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைமையாக, தலைவராகத் திகழ்ந்த லெனின் 1924 இல் இறந்த பிறகு, ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் தலைவரானார். இலட்சக்கணக்கான தனது நாட்டு மக்களை தொழில் துறை மேம்பாட்டில் ஈடுபடுத்தினார். லெனின் உருவாக்க விரும்பிய கொள்கைகளை கைவிட்டு , கூட்டுப் பொருளாதாரமயமாக்கல் மூலம் விவசாய உற்பத்தியைத் தொழில்மயமாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான கொள்கைகளை உருவாக்க ஸ்டாலின் முயன்றார்.
சோவியத் பகுதியில் விவசாயத் துறையின் கூட்டுப் பண்ணைமயமாக்கலை அமல்படுத்திட ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கினார். விவசாயிகள் தங்கள் தனிப்பட்ட நிலங்களையும் கால்நடைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கூட்டுப் பண்ணைகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடுமையான பொருளாதாரச் செழிப்பை இழந்திருந்தாலும் சோவியத் உலகின் மிக முக்கியமான நாடாகத் திகழ்ந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பனிப்போர்களால் இரஷ்யா பாதிப்பை அடைந்தது. இதனால் ஸ்டாலின் செல்வாக்கையும் சொல்வாக்கையும் குறைக்க பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை அந்நாடுகள் எடுத்து வந்தன. பல நடவடிக்கைளை எடுத்தாலும் சோவியத் வளர்ச்சி பிரமாண்டமாகவே இருந்தது.
உலகம் வியந்த ஒரு செயலை சோவியத் 1957ஆம் ஆண்டு முதன்முதலாக நிகழ்த்தியது. 1957 அக்டோபர் 4 ஆம் தேதி ஸ்புட்னிக் 1 ஐ சோவியத் ஏவியபோது உலக நாடுகள் மிரண்டு போயின.
சோவியத்தின் விண்வெளி முயற்சிக்குப் பதிலடி தர அமெரிக்கா அடுத்தடுத்த விண்வெளி முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டது. விண்வெளி , தொழில் போன்ற பல நடவடிக்கைகள் காரணமாக சோவியத் பொருளாதார ரீதியாக கடுமையான பல சவால்களை எதிர்கொண்டது.
1980களில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் விலைகளைக் மிகக் குறைந்த அளவிற்குக் கொண்டு வந்து சோவியத் பொருளாதாரத்தை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியபோது சோவியத் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
சோவியத் ஒன்றியத்தைக் கலைக்க அமெரிக்கா பல நேரடி மறைமுகத் தாக்குதல்களைத் தொடர்ந்து செய்து வந்தது.
கோர்பச்சேவ், டிசம்பர் 25, 1991 அன்று சோவியத் ஒன்றியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி சோவியத் ரஷ்யா 15 நாடுகளாகப் பிரிந்தது. அதன்படி ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஜார்ஜியா, ஆர்மேனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், லாட்வியா, லித்துவேனியா, மால்டோவா, எஸ்டோனியா என பதினைந்து நாடுகளாகப் பிரிவதாக ஒவ்வொரு நாடுகளும் விடுதலை அறிவிப்பை வெளியிட்டன.
உலகத்தை ஒரு குடைக்குள் கொண்டு வர போராடிய சோவியத் இரஷ்யா, சிதறி பொருளாதாரக் காற்றால் பிய்த்து வீசப்பட்டன. அமெரிக்காவின் கனவு நிறைவேறியது. 1924 முதல் 1991 வரை உலகம் சோவியத் என்ற கட்டமைப்பைக் கண்டு சற்று மிரண்டது என்பது அறிய வேண்டிய வரலாறு .
அறிய வேண்டிய பார்க்க வேண்டிய சில படங்கள்
சோவியத் யூனியன், உலகின் ஆறில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நாடாகும். இது சுமார் 22,402,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு விளங்கியது என்பது நாம் அறிய வேண்டிய வரலாறு.
No comments:
Post a Comment