Sunday, 28 May 2017

உத்திரகோசமங்கை

“ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதும்காண் அம்மானாய்!’
என்று இலக்கியங்களில் பாடப்பட்டதைக் கொண்டு இங்கும் கடல் இருந்தது என்பதற்கு சான்றுகள் கிடைக்கின்றன. 
         2.5.17 அன்று பேரூராதீன இளையபட்டம் சுவாமிகளுடன் இராமநாதபுரம் மாவட்டம் உத்திர கோசமங்கை செல்லும் வாய்ப்பு கிடைத்தது
     இராமநாதபுரம் சமசுதானம் இராணியம்மா தலைமையில் இளையபட்டம் அடிகள் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
      இறைவன், இறைவிக்கு தனியாக நடனம் ஆடிய தலம் என்று பெரியவர்களால் சொல்லப்பட்டது. 
       உலகச் சிறப்புப் பெற்ற மரகத லிங்கத்தை அருகில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு இளையபட்டம் அடிகள் மூலம் எனக்கு கிடைத்தது.
      பின்னர் திருவாசகப் பாடல்களுக்கு பரத நாட்டிய நிகழ்வு அற்புதமான முறையில் நடந்தேறியது. 
    பரதம் வடமொழி அல்லது கர்நாடிக் என்று கூறப்படும் புரியாத மொழிக்குத்தான் என்பதை மாற்றி சிவபுரம் அமைப்பினர் திருவாசகப் பாடல்களுக்கு நடனம் ஆடியது சிறப்பிற்குரியது.
     இரவு உணவு முடிந்து திருக்கோயில் தங்கும் விடுதி அறையில் இளைய அடிகள் ஒய்வெடுக்க நானும் ஓட்டுநர் சம்பத் ம் திருக்கோயில் வளாகத்தில் தரையில் போர்வை விரித்து வானம் பார்த்து நட்சத்திரங்கள் கண்டு பல கதைகள் பேசி உறங்கிப் போனோம்.
            

நாகர்கோயிலில் ஊர் சுற்றிய நிகழ்வு

             ஊர் சுற்றுவது என்பது ஒரு சுகமான அனுபவம். அதுவும் இரயிலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பல நிலையங்களை கடந்து, பல மனிதர்களைப் பார்த்து  அலைதல் தனி அலாதி தரக்கூடியது. கடந்த மே மாதம் 2017 ன் போது நான் தனி ஒருவனாக பல ஊர்களை சுற்றி  வந்தேன். முதலில் நாகர்கோயில் க்கு இரயிலில் சென்று, கோட்டாறு நிலையத்தில் இறங்கி சூடான தேநீர் அருந்தி பின் பத்மநாதபுரம் அரண்மனை சென்று நேர்த்தியான கட்டிட அமைப்பை இரசித்து அதன் பின் சுசீந்திரம் தாணுமலாய சுவாமி ஆலயம் சென்று தரிசனம் செய்தேன். நாகர்கோயில் தமிழகத்துடன் இணைக்கப்பட்டாலும் இக்கோயில் இன்னும் கேரளா நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது,. நம்ம ஊரு சிவாச்சாரியார்கள் இதற்கெல்லாம் போராடாமல் நெய் ஊற்றி சாப்பிட்டு மணி அடித்து இறை சேவை புரிந்து வருகின்றனர். பின் இயிலில் கோவை சென்று  அடுத்த நாள் இராமேசுவரம் பிரயாணத்திற்கு தயாரானேன்.