தருமையாதீன_பூசைமடம்
#திருத்தருமபுரம் மடத்தின் ஆன்மார்த்த பூஜாமூர்த்தியாக "#ஸ்ரீசெந்தமிழ்_சொக்கநாதப்பெருமான் எழுந்தருளி உள்ளார்!!", இவர் ஸ்படிகலிங்கமாக தாம் எழந்தருளி இருக்கும் பெட்டகத்துடன் "ஆதிகுரு முதல்வருக்கு மதுரை பொற்றாமரை குளத்தில் இறையருளால் கிடைக்கப் பெற்றவர்!!",
"கண்ணுக்கு இனிய பொருளாகி என் கரத்தில் வந்தனை!!" என்று இதனை ஸ்ரீகுருஞானசம்பந்தப் பெருமானும் குறிக்கிறார்கள், "இவர் திருவாலவாய் பெருமான் ஆதலால் ஆலவாய் சொக்கநாதப் பெருமான்தான் தருமையாதீன கர்த்தர்களுக்கு ஆன்மார்த்த மூர்த்தியும் ஆவார்!!"
இம்மூர்த்தி எழுந்தருளியுள்ள இடம் தருமபுர மடத்தில் "#பூசைமடம்" என்ற பெயரில் தெற்கு நோக்கி அமைந்துள்ளதும் இதன் இருபக்கங்களிலும் உள்ள "96 கண்கள்" உடைய சாளரசன்னலும் தில்லை சிற்றம்பலத்தையே நினைவு கூறுகிறது!!"
"மதுரை, உச்சந்தலைக்கு மேலே உள்ள #துவாதசாந்த_ஸ்தான_தலம் ஆதலால், இப்பூசைமடத்தின் "தொட்டிகட்டு" என்னும் இடத்தில் நின்று செந்தமிழ் சொக்கநாதரை வழிபடுவோரின் உச்சந்தலைக்கு நேரே சொக்கநாதப் பெருமான் எழுந்தருளி இருக்கும் பீடம் இருப்பது தனிச்சிறப்பு ஆகும்!!"
"தில்லையிலும் ஓதுவார்கள் நின்று பாடும் எதிரம்பலத்தின் கீழ்பகுதியில் நின்று தரிசிக்கும் போது கூத்தபிரானின் #குஞ்சிதபாதம் நம் உச்சந்தலைக்கு நேரே இருக்கும்!! இந்த இரு ஆலயத்தையும் துவாதசாந்த பூர்வமாக நினைவு கூறும் வகையிலேயே தருமையாதீன பூசை மடம் அமைந்துள்ளது!!" இவ்வமைப்பு வேறு எங்கும் கிடையாது!!
"பரார்த்த பூசைக்கு உரிய ஆலயங்களை போலவே கருவறையை சுற்றி வர சுற்றாலை, தீர்த்த கிணறு, தனி மடைப்பள்ளி முதலியவற்றுடன் ஒரு தனித்தொகுப்பாக தருமையாதீன பூசை மடம் அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்",
இப்பூசை மடத்தின் தொட்டிகட்டு என்ற பகுதி மிக விசேசமானது, இந்த "தொட்டிகட்டில் நின்று தரிசிப்போர் ஒரே நேரத்தில் ஸ்ரீசொக்கநாதப் பெருமான், ஸ்ரீகுருஞானசம்பந்தப் பெருமான், ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதனங்கள், தம்பிரான்கள், திருக்கூட்டத்து அடியவர்கள் என அனைவரையும் தரிசிக்க முடியும்!!" இவ்வமைப்பு வேறு எங்கும் இல்லை என்பது எண்ணி இன்புறத் தக்கதாம்,
"தருமையாதீன பூசை மடத்தில் ஸ்ரீசெந்தமிழ் சொக்கநாதப் பெருமானோடு குருமகா சன்னிதானங்களின் உடையவர் என்னும் சிவபூசை, ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் ஆகிய மூர்த்திகளும் எழுந்தருளி உள்ளனர்", பூசைக்கு வரும் குருமகா சன்னிதானங்கள் முதலில் தம் உடையவர், விநாயகர், முருகன் உள்ளிட்டோருக்கு அபிசேகம் செய்துவிட்டு பிறகு, "தங்கப் பேழையில் இருக்கும் ஸ்ரீசெந்தமிழ் சொக்கநாதராம் ஸ்படிக லிங்க மூர்த்தியை வெளிக் கொணர்ந்து ஸ்நான வேதிகையில் எழுந்தருளப் பன்னுவார்கள்!!"
"ஸ்ரீ சொக்கநாதருக்கு திருமடத்து நந்தன வனத்தில் மலரும் பூக்களே உபயோகப் படுத்தப் படும், கடைகளில் வாங்குவதில்லை என்றாலும் அன்பர்கள் பக்தியுடன் கொடுக்கும் மலர்களையும் பெருமான் ஏற்கிறார், இவருக்கான அபிசேக தீர்த்தமாக பூசைமடத்து உள்ளேயே இருக்கும் கிணற்று நீர் மட்டும்தான் பயன்படுத்தப் பெறும், இவரது நெய்வேத்யங்கள் பூசைமடத்திலேயே உள்ள பிரத்யோக மடைப்பள்ளியில் மட்டுமே தயரிக்கப் படும்!!"
"எவ்வளவு விலை கூடினாலும் சுவாமியின் பூசைக்கு தேவைப்படும் சந்தனம் முழுவதும் தினமும் புதிதாக கைகளால் அரைத்தே பெறப்படுகின்றது!!", இதற்காக உயர்ந்த ரக சந்தன கட்டைகள் வாங்கப்பட்டு, பூசைமடத்தில் பச்சைகற்பூரம் குங்குமப்பூ முதலியவற்றுடன் சேர்த்து அரைக்கப் படுகின்றது!!
தினமும் புதிய சந்தனத்தால் சுவாமியின் மேனிமுழுவதும் காப்பிடும் அளவுக்கும் ஏனைய தேவைகளுக்கும் இங்கு சந்தனம் அரைத்தே பயன்படுத்த படுவது வேறங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்!!
சிவதீபன்: ஆதீனத்தின் கோசாலையில் இருந்து பெறப்படும் பால் தயிர் முதலிய திரவியங்களுடன் நீராட்டு காணும் ஸ்ரீ சொந்தமிழ் சொக்கநாதப் பெருமானுக்கு ஆதிகாலம் தொட்டே நீராட்டுவதற்காக, "சகஸ்ரதாரை, காண்டாமிருக கொம்பு, யானைதந்தம், பசுகொம்பு, தங்கப்பூணிட்ட வலம்புரி இடம்புரி சங்குகள் முதலிய அரிய பாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றது!!"
நீராடிய பிறகு சந்தனகாப்பு, சந்தனாபிசேகம் ஆகியதும் சுவாமிக்கு ஜலதோஷம் வராமலிருக்க "ஸ்நான வேதிகையிலேயே மிளகு சாதம் நிவேதனமும்" பிறகு அலங்காரம் ஆனபிறகு "மகாநெய்வேத்யமும்" நடைபெறும்
மகாநெய்வேத்யம் என்பது, "ஞாயிறன்று வெண்பொங்கல், திங்களன்று சர்க்கரை பொங்கல், செவ்வாயன்று சம்பாசாதம், புதனன்று புளியோதரை, வியாழனன்று பருப்பு சாதம், வெள்ளியன்று தயிர்சாதம், சனியன்று எள்ளன்னமுமுமாக" #கமலபாத்திரத்தில் இருப்பதோடு, நித்யபடி சுத்தான்னத்துடன் பருப்பு மசியல், ஒருகூட்டு, ஒருபொறியல், தயிர் வீதம் நடைபெறும் கூடவே, "நெய்வேத்தியத்தின் பொழுது தாகசாந்திக்காக பருக நீரும் சுவாமிக்கு வைக்கப்படும் ஒரே சம்பிரதாயம் தருமை பூசை மடத்திற்கு மட்டுமே உரிய சிறப்பாகும்!!"
பிறகு விசேட சோடசோபச்சாரத்துடன் தீபாராதனை நடைபெறும், "ஸ்ரீ செந்தமிழ் சொக்கநாதப் பெருமானுக்கு பழங்கலந் தொட்டே சோடசோபச்சாரம் நிகழ்ந்தது!!" என்பதனை குமரகுருபரர சுவாமிகள்,
"அருத்தியோடு எம்மை உருத்திர கணங்கள் தெரித்து மற்று இவ்வாறு அருச்சனை புரிதீர் என்று அங்கையற்கண்ணி பங்கில் வீற்றிருந்த செக்கர் வார்சடை சொக்க நாயகனை ஈறெண் திறத்து உபசாரம் வாய்ப்ப!!" என்று பாடுகிறார்கள்!!
ஆன்மார்த்த பூசையில் சோடசோபச்சாரம் கொடுப்பதில் பழமையானது தருமையாதீனம் என்பது இதன் மூலம் விளங்குகின்றது
சிவபூசை நிறைவில் மகாதீபாராதனை ஆனதும் சண்டேச பூசை நடைபெறுவது வழக்கம், ஆனால் "தருமபுரத்தில் சொக்கநாதருக்கு "#சுத்தபூஜை!!" என்ற முறையில் பூசைகள் நடைபெறுவதால் இங்கு சண்டேசர் பூசை பத்தி என்பது கிடையாது!!"
சிவதீபன்: "ஸ்ரீசொக்கநாதப் பெருமானை பெட்டகத்தில் ஒடுக்கும் பொழுது பெருமானின் இண்டை மாலையை பூசை செய்யும் சன்னிதானங்கள் தமக்கு தீட்சை பன்னிய முந்தய சன்னிதனங்களுக்கு அர்பணிப்பதாக கருதி எடுத்து வைத்து, சிவபூசை பலனையும் அவர்களுக்கே கொடுத்து விட்டு சுவாமியை பெட்டகத்தில் ஒடுக்கும் சம்பிரதாயமும் தருமபுரத்தில் மட்டுமே நடைபெறும் சிறப்பு வழக்கம் ஆகும்!!"
பூசைக்கு வரும் சன்னிதானங்கள் சிவசிந்தனையோடு வருவார்கள் அவர்களது செவியில் வேறு உலகியல் ஒலிகள் சேராத வண்ணம், அவர்களது பணிவிடையும் நீராடி ஈரத்துண்டுடன், "ஹரஹர மகாதேவ!! சிவா!!" என்று கோஷம் எழுப்பி கொண்டு கைதட்டியபடி வருவார்
அப்போது சன்னிதானங்கள் திருமஞ்சனம் செய்து அனுட்டானம் நிறைவு பன்னி கண்ணாடி, காகிதம் உள்ளிட்ட பொருட்களை தீண்டாமல் எவர் முகத்தையும் ஏறிட்டு பார்க்காமல் சிவபூசை செய்யும் கரங்களை ஹிருதயத்திற்கு நேராக சின்முத்திரை காட்டியபடி வைத்து கொண்டு நாமஜபம் செய்தபடி பூசை மடத்திற்கு பிரவேசிக்கும் காட்சி மிக ஆனந்தமான ஒன்று!!
"ஸ்ரீ சொக்கநாதப் பெருமான் பூசை நிறைவேறும் வரை ஒருவரிடமும் உரையாடாமலும் நீர் கூட பருகாமலும் எவரையும் தீண்டாமலும் மிக ஆச்சாரமாக இருந்து பூசையை நிகழ்த்துவது தருமைக்குரிய சிறப்புகளுள் ஒன்றாம்!!"
"சிவபூசை செய்யும் பொழுதோ வேறு பூசைகளிலோ உடுத்தியிருக்கும் வேட்டி முழங்காலுக்கு மேலே இருக்க வேண்டும் என்ற மரபு படி, சன்னிதானங்களும் தருமை தம்பிரான்களும் வேட்டி நுனியை முழங்காலுக்கு மேலே தூக்கி செருகி இருப்பார்கள்!!"*
இக்காட்சி தருமையாதீனம் தவிரவேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சியாம், இதற்கு "கந்தை மிகையாம் கருத்து!!"* என்ற தேவார வாசகமும், "வழிபட கடவ மறையோன் முன்னும் துகிலிடை சுற்றி தூநீர் ஆட்டி!!" என்ற பதினோறாம் திருமுறை வரிகளும் சான்றாக அமையும்!!
சிவதீபன்: சுவாமிக்கு பூசை நிறைவேறிய பிறகு ஓதுவார்கள் தோத்திரம் பாடுகையில் சன்னிதானங்கள் பெருமானுக்கு நமஸ்காரம் செய்வார்கள், சன்னிதானம் எழுந்த பிறகு தம்பிரான்கள் நமஸ்காரம் செய்வார்கள் அவர்கள் எழுந்த பிறகு வந்திருப்போர் அனைவரும் நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பது விதி!!
பூசை மடத்தில் பாடும் ஓதுவார்கள் "இண்டை கட்டிய ஓதுவார்கள்!!" எனப்படுவர், இவர்கள் மட்டுமே பூசை மடத்தில் பாடும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்
பிறகு ஸ்ரீகுருஞான சம்பந்தப் பெருமானுக்கு பூசை தீபாராதன நிறைவேறியதும் "தம்பிரான்கள் "ஹரஹர மகாதேவ சிவா!!" என்று கோஷமிட சன்னிதானங்கள் அனைத்து மூர்த்தங்கள் படங்கள் முதலியவற்றுக்கும் மலரிட்டு வணங்கி பண்டாரகட்டுக்கு எழுந்தருளுவது தருமையில் உள்ள தனிப்பட்ட நடைமுறை ஆகும்!!"
பூசை நிறைவில் பெட்டகத்தில் ஸ்ரீசொக்கநாதப் பெருமான் எழுந்தருளிவிடுவதால், *வெள்ளித் தேரில் நாள்முழுதும் சுப்ரமணியர் காட்சி தருவது வழக்கம்!!"
ஏனைய சைவ ஆதீனங்கள் எதிலும் இல்லாத தருமையில் மட்டுமே உள்ள சிறப்பான ஒரு கட்டமைப்பு "#பதினாறொடுக்கம்" ஆகும்!! இது ஆகாமோத்தமான யோக கலையின் பதினாறு ஸ்தானங்களை கூறும் பதினாறு சிற்றறைகள் ஆகும், "இந்த அமைப்பை பூசை மடத்தினை வலம் வரும் பொழுது தரிசிக்கலாம் பூசை மடத்தை வலம் வரும் அமைப்பும் பதினாறு ஒடுக்கமும் பூசைமட விமானம் தில்லை சிற்றம்பல பொற்கூரை போன்ற அமைப்பும் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புத அமைப்பு என்பதனை எண்ணுகையில் நம் மனம் கற்கண்டினும் இனிய உவகை கொள்ளும்!!"
சிவதீபன்: நித்யபடி நடைபெறும் "ஸ்ரீ சொக்கநாத ஸ்வாமி ஆன்மார்த்த பூசையை சன்னிதானங்கள் தலயாத்திரை செய்கையிலும் உடன் எழுந்தருள பன்னி கொண்டு போகும் வகையில் பல்வேறு கட்டளை மடங்களிலும் தனிபூசை மடமும் வெள்ளித்தேரும் தனி மடைப்பள்ளியும் ஆதீன நிர்வாகத்தால் அமைக்கப் பட்டுள்ளது!!"
இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக "ஆன்மார்த்த மூர்த்திக்கு வருடாந்திர உற்சவம் செய்யும் ஒரே வழக்கம் திருத்தருமபுரம் மடாலயத்திற்கே உரிய சிறப்பாகும்!!"
"ஆதீன ஆன்மார்த்த சுவாமி, திருவாலவாய் சொக்கநாதர் ஆகையால் அவர் விரும்பி மகிழும் "#ஆவணிமூல #பிட்டுதிருவிழா!!" இங்கு வருடாந்திர உற்சவமாகவே கடைபிடிக்கப் படுகிறது!!"
மதுரையில் ஆவணிமூலம் கொடியேறியது முதல் பத்து நாட்களும் தருமபுரத்திலும் பெருமானுககு விசேச ஆராதனைகள், பிட்டு அப்பம் முதலியவை நிவேதனம் செய்து திருவிளையாடல் புராணம் சொற்பொழிவும் செய்து விழா எடுக்கப் படுவதும் தருமைக்கு மட்டுமே உரிய தனிப் பெருஞ்சிறப்பாகும்!!
என்ற அளவில் அரிய தகவல்களை விரிவஞ்சி நிறைவு செய்கிறோம்!!
"மூர்த்தி எல்லாம் வாழி!! எங்கள் மோனகுரு வாழி!!அருள் வார்த்தை என்றும் வாழி!! அன்பர் வாழி!! பராபரமே!!"
திருச்சிற்றம்பலம்🙏🏻