Tuesday, 27 January 2015

அகதி

நாடு இழந்தவர்களை அகதி என்கிறோம் மொழி இழந்தவர்களை என்னவென்று அழைப்பது?

பயணம்

பொங்கல் திருநாள் அன்று காலையில் ஈரோடு தொடங்கி திருச்சி வரை என் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன் .  நாமக்கல்தாண்டியதும் வளையபட்டி என்னும் சிற்றூர் அருகே மற்றொரு வாகனத்தில் அண்ணன் தங்கை இருவரும் கவனிக்காமல் வலது புறம் திரும்ப பின் வந்த வாகனம் நிதானம் இல்லாமல் அவா்கள் மீது மோதியது  . இருவருக்கும் பல இடங்களில் காயம் ஓடிச் சென்று காப்பாற்றினேன் .  நீர் கொடுத்தேன் அவர்கள் இல்லத்திற்குத் தகவல் கொடுத்தேன் . பத்து நிமிடத்தில் வந்தார்கள் தங்களது காரில் அவர்களை அழைத்துச் சென்றனர். யாரும்   தவறி கூட என் பக்கம் திரும்பி என்னை விசாரிக்கவில்லை  . அவர்கள் நலம் பெறட்டும் என்று நினைத்துக் கொண்டு என் நெடும் பயணத்தை மீண்டும் தொடர்ந்தேன்.   பயணங்கள் முடிவதில்லை.

அதிகாலை

கண்கள் திறந்து கவனம் கொண்டு காவிரியில் குளிக்க இறங்கினேன் .       கால் மட்டும் நனைந்தது .    அதிகாலை விடிந்தது . காவிரி விடியுமா?

மறதி

இன்று மட்டும் என்னால் எழுத முடியாது .  நீ என்னை விட்டு விலகிச் சென்ற நாள் இது  . விரல்கள் சொற்களை மறந்து விட்டன.

தனிமை

நெடிய மரத்தின் கீழ் தனித்து நிற்கிறேன்   இலையுதிர் காலம்  வேருக்கும் எனக்கும் நீர் இல்லை

நெஞ்சம் அழுகிறது

கவனிக்கவில்லை யாரும் தொலைந்தவனின் செருப்பையும் புறக்கணிக்கப்பட்ட மனம் கொண்டவர்களையும்

புவியரசு கவிதைகள்

படகை எதிர்பார்த்துக் கரையைத் தொலைத்தவன் 

பயணம்

இருசக்கர வாகனம்                                                  ஒரு வழிப் பாதை