Sunday, 27 November 2016

நீளமான கார்

கோவை ஜீ டி நாயுடு கார் அருங்காட்சியகத்தில் பழமையான கார் முதல் புதுவகையான கார்கள் வரை காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

பழமையான வண்டி

திருவனந்தபுரம் அரண்மனையில் அரசர்கள் பயன்படுத்திய பழமையான மகிழுந்து..

குளம்

திருவனந்தபுரம் அரண்மனை அருகே கண்ட குளம். அமைதியான  தருணத்தில் அமர்ந்து  இரசித்துப் பார்த்தது.

நாற்காலி

பத்மநாதபுரம் அரண்மனையில் கண்ட நாற்காலி.

பத்மநாதபுரம் அரண்மனை

வணக்கம். சமீபத்தில் சேர நாட்டிற்குச் சுற்றுலா சென்று இருந்தேன். உண்மையில் கடவுளின் தேசம் தான்.
 அதனால் தான் மருத்துவக் கழிவுகளைத் தமிழ்நாட்டில் கொட்டிவிட்டு அவர்கள் நகரைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். திருவனந்தபுரம் , மார்த்தாண்டம் வழியாகத் தமிழ்நாட்டில் நுழைந்தோம். மாநிலங்கள் பிரிப்பின் போது பத்மநாதபுரம் அரண்மனையை மட்டும் கேரளா பராமரிப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டு கன்னியாகுமரி, நாகர்கோயிலைத் தமிழ்நாட்டிற்குப் பிரித்து தந்தார்கள். உண்மையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் சத்தியமாக நாம் இப்படி வைத்திருப்போமா? என்பது ஐயமே..
 






 மிக அழகான அரண்மனை. அழகாக திட்டமிட்டுக் கட்டப்பட்ட அரண்மனை.சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. தமிழ்நாட்டு அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் மணல் திட்டாகத் தான் உள்ளது. கலைப் பொருட்களைப் பராமரிப்பதில் கேரளா அரசு மிகவும் ஆர்வம் காட்டுவது வரலாற்றுப் பிழை ஏற்படாமல் இருக்க பிற்காலத்தில் உதவும்.                                                  
                                                                                   அன்புடன்
                                                                                     சங்கரன்.