Friday, 10 June 2016

பொதுவுடைமை மரம்



                                                    கவிதைகள்
                                                  பொதுவுடைமை
                          
நடந்தேன்.
ஒற்றையடிப் பாதையில் ஒரு ஓரமாய் நடந்தேன்.
துளிர் விட்ட மரத்தில் சிறிது நேரம் களைப்பாற்றி விட்டு
பாதி நகரமான எனது கிராமத்திற்கு நடந்தேன்.
சோளம் கொத்தித் தின்ற சிட்டுக்குருவிகளைக் காணாமல்
கண்ணீர் விட்டேன்.
மறுநாள் பாதி நகரமான எமது கிராமத்தை விட்டு
ஒற்றையடிப் பாதையில்
நடந்தேன்.
ஒற்றையடிப்பாதையில் இரண்டு பேர் துளிர் விட்ட மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தனர்.
ஏனென்று கேட்டேன்,
ஒற்றையடிப் பாதையை இரு வழிச் சாலையாக மாற்ற                                                 இந்த மரம் இடைஞ்சல் என்றனர்.
எல்லோரும் பயன் பெற பொதுவுடைமை என்றனர்.
தனியுடைமை தள்ளாடிய படி மரம் வீழ்ந்தது ,எனது  பாதி நகரமான கிராமம்  மீதியும் நகரமானது.
நடந்தேன்.
                                                                                                     பொஇச…